×

சூப்பர் மார்க்கெட் சூறை வழக்கு முக்கிய குற்றவாளி கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மேற்கு, 18வது மெயின் ரோட்டில் செந்தில்முருகன் (42) என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த 3ம் தேதி, இந்த கடைக்கு வந்த ரஞ்சித்குமார் என்ற வாலிபர், அங்கு பணிபுரியும் பெண்ணிடம், தன்னை காதலிக்கும்படி தொல்லை செய்தார். அவர் மறுக்கவே, ரகளை ரஞ்சித்குமார் ரகளையில் ஈடுபட்டார். இதை சூப்பர் மார்க்கெட்டின் மேலாளர் கார்த்திக் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், 24 ரவுடிகளை வரவழைத்து கார்த்திக்கை சரமாரி தாக்கி, கடையில் இருந்த பொருட்களை சூறையாடினார்.

பின்னர் கடையின் கல்லா பெட்டியில் இருந்த ₹54 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் செந்தில்முருகன் திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ரஞ்ஜித்குமாரை போலீசார் நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் 24 ரவுடிகளை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...